Home இலங்கை ஊடக சுதந்திரம் – ஊழல் – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இலங்கை 91 இடத்தில்….

ஊடக சுதந்திரம் – ஊழல் – ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இலங்கை 91 இடத்தில்….

by admin

 

ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் ஆகியனவற்றின் அடிப்படையில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இலங்கை 91-வது இடத்திலும்,  இந்தியா 81-வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மொத்தம் 180 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த விருடத்தில் இந்தப் பட்டியலில் 79-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 81-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

பூஜ்ஜியம் முதல் 100 வரை மதிப்பெண் அடிப்படையில் ஊழல் நாடுகளின் பட்டியல் கணக்கிடப்படுகிறது. பூஜ்ஜியம் மதிப்பெண் பெறு நாடு மிகவும் மோசமாக ஊழலுல் சிக்கியுள்ள நாடு எனவும் 100 மதிப்பெண் பெறும் நாடு ஊழலற்ற நாடு எனவும் வகைப்படுத்தப்படுகின்றது இந்தப்பட்டியலில் ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் அற்ற நாடுகளின் பட்டியலில்  நியூசிலாந்து முதல் இடத்திலும் டென்மார்க இரண்டாவது இத்தலும் உள்ளன. இந்த வகையில்  இலங்கை 91-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, ‘ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் சில நாடுகளில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளார்கள், எதிர்க்கட்சியினர், சமூக கண்காணிப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில நேரங்களில் கொலைகள்கூட நடைபெறுகின்றன. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் மேற்கூறிய தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நாடுகளில் ஊழலை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More