Home இந்தியா தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரினை இந்தியா கைப்பற்றியுள்ளது

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரினை இந்தியா கைப்பற்றியுள்ளது

by admin


தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டியினை வென்றதன் மூலம் இந்திய இணி தொடரை வென்றுள்ளது. முதலில்துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் இந்தியா 7 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றயிருந்ததுடன் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More