Home இலங்கை கிளிநொச்சி பிரமந்தனாறில் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிரமந்தனாறில் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் ஆரம்ப மருத்துவ வெளிநோயாளர் நிலையத்தின் புதிய கட்டடம் இன்று (26.02.2018) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தினை திறந்து வைத்துள்ளார்.

பிரமந்தனாறு, புன்னைநீராவி கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் ஆரம்ப சுகாதார தேவைகளின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் அடிப்படைத் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூட நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது எனவே இந்த நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சு இவ் வெளிநோயாளர் பிரிவை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குருகுலராஜா, பசுபதிபிள்ளை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் குமாரவேல், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மைதிலி மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More