குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கு சவால் விடுக்கக்கூடிய தலைவர்களை கைது செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கக்கூடிய தலைவர்களை சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மலர்மொட்டு சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதனால் வேறும் சின்னம் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment