இலங்கை பிரதான செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச அழுத்தம் தேவை.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா. சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.

வடமாகாண சபையின் 117ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றும் போது ,

போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதன் இறுதி காலப்பகுதியிலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான போராட்டங்களை நட த்திவருகின்றனர். ஆயினும் காணாமல் அக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையை கண்டறிய இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஒன்றை உருவாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து அது அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.