Home உலகம் தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

by admin


தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹைக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

66வயதான பார்க் கியுன் ஹையினும் அவரது நெருங்கிய தோழியான சோய் சூன் சில் என்பவரும் சட்டத்துக்கு புறம்பான வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, பெரும் தொகையை லஞ்சமாக பெற்று உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, கடந்த ஆண்டு பதவி இழந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது லஞ்சம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசு ரகசியங்களை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றில் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு சட்டத்தரணிகள் நேற்றையதினம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் 110 மில்லியன் டொலர அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதியாக பதவி வகித்த அவர், அப்போது இடம்பெற்ற ஊழல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More