Home இலங்கை உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி :

உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் இன்னும் நடைபெறவில்லை – ஈ.பி.டி.பி :

by admin

ஆயிரம் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைக் கேட்டவர்கள் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். தேர்தல் முடிந்த கையோடு மக்களை மறந்து அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதும் அரசியல்காழ்ப்புணர்ச்சிகளை உமிழ்வதும் வாக்களித்த மக்களுக்கு எவ்விதமான பயனையும் பெற்றுத்தர போவதில்லை என ஈ.பி.டி.பி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது

கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையை நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் அர்த்தமற்றதாக்கியதைப் போன்று உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் முடக்கும் விதமாக எவரும் செயற்படக் கூடாது. தமக்கு சேவைகளாகப் பலன் கொடுக்க வேண்டுமென மக்கள் வழங்கிய வாக்குகள் மீதான நம்பிக்கையை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

அந்த வகையிலேயே நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் ஆட்சி அமைக்கக் கூடிய முயற்சி எடுக்கக் கூடியவர்கள் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் எனவும் அத்தகையவர்கள், மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது அதற்கு நாம் முழுமையானஆதரவை வழங்குவோம் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தோம்.

எமது அறிவிப்பைத் தொடர்ந்து ஆட்சி அமைக்கசிலர் முயற்சித்தாலும் அதற்கான பேச்சு வார்த்தைகள் உத்தியோகப்பற்றற்ற வகையிலேயே இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் காலத்தை கவனத்தில் கொண்டு அர்த்தமுள்ளஉத்தியோகபூர்வமான பேச்சுக்கள் நடைபெறுவது அவசியமானது. அதற்கான கதவுகள் இன்னமும்திறந்தேயிருக்கின்றன. பல்வேறு தேவைகளுடனும், கோரிக்கைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்குசேவை செய்ய அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவரும்புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More