Home இலங்கை சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பிலான விசாரணை நிறைவு

சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பிலான விசாரணை நிறைவு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் என்பவர் தப்பி செல்ல உதவியமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து , விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற புலனாய்வு துறை அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது , வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகள் அனைத்தையும் மேற்கொண்டு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளோம் என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More