Home உலகம் டிஜிட்டல் பணம் மனிதர்களை கொலை செய்கின்றது – பில் கேட்ஸ் ..

டிஜிட்டல் பணம் மனிதர்களை கொலை செய்கின்றது – பில் கேட்ஸ் ..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டிஜிட்டல் பணம் மனிதர்களை கொலை செய்கின்றது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். பிட்கோயின் உள்ளிட்ட கிரிப்ரோ  நாணயங்கள் மக்களை நேரடியாகவே கொல்வதாகத் தெரிவித்துள்ளார். பிட்கோயின் போன்ற நாணயங்கள் போதைப் பொருட்களை கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடுவதற்கு இந்த நாணயங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் நாணயப் பயன்பாட்டினை சாதகமான ஒன்றாக தாம் நோக்கவில்லை எனவும், பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், நிதிச் சலவை செய்தல் மற்றும் வரி ஏய்ப்பினை தடுக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நாணயங்களின் பயன்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாது பில்கேட்ஸ் விமர்சனம் செய்வதாக சில தரப்பினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More