Home இந்தியா இணைப்பு 2 – ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் விடுதலை

இணைப்பு 2 – ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் விடுதலை

by admin

 

ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் பிணைத்தொகை கட்டிய பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காக சென்றதாக ஆந்திராவில் 84 தமிழர்கள் கைது

Mar 2, 2018 @ 13:14

ஆந்திர காட்டுப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை இன்று அதிகாலை ஆந்திர காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து செவ்லதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், ஒரு பாரவூர்தியை துரத்தச் சென்று அவர்களைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறதெனவும் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி, ஆந்திராவில் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More