இலங்கை பிரதான செய்திகள்

லசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவே மூடிமறைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லசந்த கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லசந்தவின் கள குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்வதற்கு நேரடியாகவே பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார தலையீடு செய்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் தகவல்கள் காணப்பட்ட போதிலும் அதனை அவர் வேண்டுமென்றே மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.