Home இந்தியா கண்தானம் பற்றிய விழிப்புணர்வு – நிதிதிரட்டும் பணியில் அமலா ஹோம்

கண்தானம் பற்றிய விழிப்புணர்வு – நிதிதிரட்டும் பணியில் அமலா ஹோம்

by admin


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால் தற்பொழுது அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்;. இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.

அகர்வால் கண் மருத்துவமனைக்காக தான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழு சில முக்கியமான புள்ளி விவரங்களை கவனித்த நிலையில் இந்த எண்ணம் தோன்றியதாக இது குறித்து அமலா பால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் இதில் 70 சதவிகிதம் கோர்னஸ் டிரன்ஸ்ப்பிளாண்ட் (Cornes Transplant) மற்றும் கண்புரை போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை.

இதற்கு பெரும் தடையாக இருக்கும் இருப்பது கண்தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு 40,000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண்தானம் நடக்கின்றது. எனவே தான் தனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண்தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More