Home இலங்கை கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை உந்துருளியில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

36 வயதான 3 பிள்ளையின் தந்தையான கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து நாகராசா என்ற நபரே பலியானார்,.  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயனித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி பலியானர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More