குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
14 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு ஆதரவளிப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love
Add Comment