Home இலங்கை முகமாலைப் பகுதிக்கு ஐநா வின் சிறப்புப் பிரதிநிதி சென்றுள்ளார்

முகமாலைப் பகுதிக்கு ஐநா வின் சிறப்புப் பிரதிநிதி சென்றுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி   இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன், கிளிநொச்சி முகமாலை கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று 06-03-2018 காலை பத்துமணியளவில் குறித்த பகுதிகளுக்கு சென்ற அவர் பணிகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றுகின்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்

வடக்கில் மிகவும் ஆபத்தான கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் என்பன செறிவாக காணப்படும் ஆபத்தான பிரதேசமாக முகமாலை பிரதேசம் காணப்படுகிறது. யுத்தகாலத்தில் யுத்தம் இடம்பெற்ற இரண்டு தரப்பினர்களது யுத்த முன்னரங்க பகுதியாக முகமாலை பிரதேசம் காணப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற ஆரம்பித்த காலம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளின் நிதியுதவியுடன் கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகிறது. இந்தப் பகுதிக்கே இன்றைய தினம் நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி மிரெட் ராட் அல் ஹூசைன் சென்றுள்ளார்

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தான் இரண்டு நாட்களாக கண்ணிவெடி அகற்றும் பணிநடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும் இது தொடர்பில் இலங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் பேசியதாகவும் இதற்கு அவர்கள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் கண்ணிவெடிகள் காணப்படும் பிரதேசங்களில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கண்ணிவெடிகள் அகற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இந்த பயணத்தின்  மீள் குடியேற்ற அமைச்சர் டிஎம் சுவாமிநாதனும் கலந்துகொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More