Home இலங்கை ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை

ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் அவசரகால நிலைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகம் டுவிட்டர் மூலம் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கைக்கு பயணம் ; செய்யும் தமது நாட்டுப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் சனநெரிசல் மிக்க இடங்களுக்கு பயணம் செய்வதனை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது. ஆத்துடன் ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நிலைமைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவசரகாலச் சட்டம் ஒர் முன்னேற்பாடு மட்டுமேயாகும் என அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More