Home இலங்கை காவல்துறைத் திணைக்களத்தின் அதிகார போட்டியே கண்டி வன்முறைகள் பரவக் காரணம்?

காவல்துறைத் திணைக்களத்தின் அதிகார போட்டியே கண்டி வன்முறைகள் பரவக் காரணம்?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

காவல்துறைத் திணைக்களத்தில் நிலவி வரும் அதிகார போட்டிகளே கண்டியில் வன்முறைகள் பரவக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. காவல்துறைத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையில் நிலவி வரும் பதவி தொடர்பான முரண்பாட்டு நிலைமையே, அவசர தருணங்களில் உரிய முறையில் செயற்படாமல் இருப்பதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக திகன, தொல்தொட்டையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இந்த எச்சரிக்கையை காவல்துறைத் திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர சம்பவம் இடம்பெற்று சில நாட்கள் கடந்தாலும் வெள்ளிக்கிழமை வரையில் கண்டிக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More