Home இலங்கை இலங்கை ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதிக்கும் ஜப்பான் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபேவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூபயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரி, ஜப்பானுக்கு சென்றுள்ளார் . இந்தப் பயணத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமரை சந்தித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில்இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பான் – இலங்கை அரச தலைவர்கள் உறுதி பூண்டனர். இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஸின்சோ   அபே தெரிவித்தார்.

அத்துடன் ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார். இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் இறுதியில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுகாதார சேவைகள் தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More