Home இலங்கை மகரகம ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள் இருவர்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது..

மகரகம ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள் இருவர்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது..

by admin

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தில் பணியாற்றும் சட்ட அதிகாரி ஒருவரும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றத்தின் பேரில் இருவரும் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத உற்பத்தி நிறுவனம் ஒன்றின் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்காக சந்தேகநபர்களால் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாகவும் பின்னர் அந்தத் தொகை இரண்டரை இலட்சமாக குறைக்கப்பட்டு முதல் கட்டமாக 50,000 ரூபா இ பெற்றுக் கொள்ளும் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More