Home இலங்கை ஜெனிவாவின் வெளிக்கள அமர்வில் பொறுப்புக்கூறல் தொடர்பில் நிலவும் கால தாமதம் குறித்து விவாதிக்கப்டவுள்ளது…

ஜெனிவாவின் வெளிக்கள அமர்வில் பொறுப்புக்கூறல் தொடர்பில் நிலவும் கால தாமதம் குறித்து விவாதிக்கப்டவுள்ளது…

by admin


இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான வகையில் நடந்தேறும் செயற்பாடுகள், பொறுப்புக்கூறல் தொடர்பில் நிலவும் கால தாமதம் குறித்து, ஜெனீவாவில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.  ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு புறம்பாக இடம்பெவுள்ள வெளி அமர்வில் இவ்விடயம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, சித்திரவதைகளிலிருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைக்கான பதில் இயக்குநர் ஆன் ஹனா, மனித உரிமை செயற்பாட்டாளர் கார்லஸ் கஸ்ட்ரசானா ஆகியோரின் தலைமையில் இந்த விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, தண்டனையிலிருந்து தப்பித்துள்ளதாக இந்த அமைப்பு தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.

இவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகி, மாறாக அவர்களுக்கு ராஜதந்திர பதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பாகவும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றது.

இதேவேளை நீதியை நிலைநாட்ட இலங்கையை சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் நடைபெறும் விவாதத்தில் இந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More