Home இலங்கை ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலப்படுத்துமாறு உத்தரவு

ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலப்படுத்துமாறு உத்தரவு

by admin

ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்காகவே ரியர் அட்மிரல் ஆனந்த முன்னலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

இம்மாதம் 23 ஆம் திகதி அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் இரு தடவைகள் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர் வருகை தரவில்லை எனவும்  இதனால், சம்பவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க, ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை முன்னிலைப்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்த நிலையிலேயே நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More