உலகம் பிரதான செய்திகள்

முகப்புத்தக நிறுவனத்தின் தகவல்களை கசிய விடும் ஊழியர்களை கண்காணிக்கும் ரகசிய படை

முகப்புத்தக நிறுவனத்தின் தகவல்களை கசிய விடும் ஊழியர்களை கண்டறிவதற்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்க், ரகசிய காவல்துறை படை ஒன்றினை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஜுகர்பெர்க் சிறப்பு குழுவினரை அமைத்து நாள்தோறும் புதிய புதிய செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் அவரது சில திட்டங்கள் முன்கூட்டியே போட்டி நிறுவனங்களுக்கு கசிந்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனத்தில் நடைபெறும் கூட்டங்களில் தனது திட்டங்களை மார்க் ஜுகர்பெர்க் அறிவித்து வரும் நிலையில் சில ஊழியர்கள் உளவாளிகளாக இருந்து வேறு நிறுவனங்களுக்கு தகவல்களை கசிய விடுவதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக மார்க் ஜுகர்பெர்க் ரகசிய படை ஒன்றை உருவாக்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரகசிய படையினர் முகப்புத்தக நிறுவனத்தின் ஊழியர்களின் தொலைபேசி, இணைய பதிவுகள் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து அவர்களுகள்ள தொடர்புகள் தொடர்பான தகவல்களை திரட்டுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.