Home இந்தியா 30 ஆண்டுகளாக ம.நடராஜனின் வழிகாட்டுதலில்தான் தமிழ்நாடு இயங்கியது – பாரதிராஜா

30 ஆண்டுகளாக ம.நடராஜனின் வழிகாட்டுதலில்தான் தமிழ்நாடு இயங்கியது – பாரதிராஜா

by admin

ம.நடராஜனின் வழிகாட்டுதலில் தான் கடந்த 30 ஆண்டு காலம்  தமிழ்நாடு  இயங்கியது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இன்று உயிரிழந்துள்ளார்.

நடராஜனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா ‘என் பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய, ‘எம்.என்.’ என்று நான் அன்பாக அழைக்கும் நடராஜன் மறைவுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். ‘புதிய பார்வை’ பத்திரிகையின் தொடக்க விழா கன்னிமரா ஹோட்டலில் நடந்தபோது குத்துவிளக்கு ஏற்றி உரையாற்றினேன். அதன்பின் நான் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.

நல்ல மனிதருக்கு இப்படியும் எதிர்ப்பா? என்று வருந்தினேன். மனிதநேயமிக்க மனிதரை இழந்து விட்டதற்காக இன்று வருந்துகிறேன். இலக்கியம், அரசியலில் சாதித்த ஒரு மனிதர் பிரிந்துவிட்டதற்காக கண் கலங்குகிறேன்.

கல்லூரி நாட்களிலேயே மொழிப் போராளியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடராஜன். இனமான மொழிக்காகப் போராடும் குணம் கொண்டவர். தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, புலிகளுக்கு வலு சேர்த்தவர். ஈழப் போராளிகளின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைத்ததில் இவரின் பங்கு ஒரு வீர வரலாறு. இதை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று ராஜீவ்காந்தியால் பாராட்டப்பட்டவர். 25 ஆண்டு காலமாக ஒரு சந்நியாசி போல துறவு வாழ்க்கையைக் கடைப்பிடித்து, இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவர் நினைத்திருந்தால் அரசியலில் உச்ச இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால், இவரின் வழிகாட்டுதலில் தான் கடந்த முப்பது ஆண்டு காலத் தமிழ்நாடு இயங்கியது என்பதை யாராலும் மறக்கவும் முடியாது… மறுக்கவும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More