Home இலங்கை ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கருணை மனு :

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கருணை மனு :

by admin

ஜனாதிபதி மாமா!
கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள். அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு சற்று முன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மட்டும் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More