குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுதந்திரக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றுவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்குளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடிய ஓர் தீர்மானத்தை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment