குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி கோதபாய ராஜபக்ச மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மை கைது செய்வதனை தடை செய்யுமாறு கோரி கோதபாய ராஜபக்ஸ நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொண்டிருந்தார். இந்த தடையுத்தரவு எதிர்வரும் 27ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட போது பாரியளவில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment