குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சைக்கிளோட்டப் போட்டிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுத்து நிறுத்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சைக்கிளோட்டப் பேரவை இது குறித்து அறிவித்துள்ளது. எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட விசேட ட்ரக் வகைகள் பயன்படுத்தி மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நீண்ட தூர சைக்கிளோட்டப் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது சைக்கிள்களில் மோட்டார்களை தெரியாமல் பொருத்தி அதன் ஊடாக சைக்கிளை செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட உள்ளது.
Spread the love
Add Comment