Home இலங்கை வீட்டு சூழ்நிலையால் பேராதனை பல்கலை செல்லாத இளம் பெண் சட்டத்தரணியால் தூக்கில் தொங்கினார்..

வீட்டு சூழ்நிலையால் பேராதனை பல்கலை செல்லாத இளம் பெண் சட்டத்தரணியால் தூக்கில் தொங்கினார்..

by admin

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 23 வயதான நாகேஸ்வரன் கௌசிகா என்னும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் யாழ்.மருதடியிலுள்ள நண்பியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர் கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை மீட்டுள்ள யாழ். காவல்துறையினர்  அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர், பல்வேறு ஊழல்கள் தொடர்பான விடயங்களில் சட்டத்தரணி ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் பெரும் தொகைப் பணத்தை தாம் திருடியதாகவும் தெரிவித்து தன்னை அச்சுறுத்துவதாகவும் அதனால்தான் தான் தற்கொலை செய்ய தீர்மானித்ததாகவும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More