85
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவும் ஜப்பானும் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை மீது கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், பிரதமர், ஜப்பான் மற்றும் இந்தியாஇலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிடம் துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஒப்படைக்கப்பட்டமை சரியான தீர்மானம் என அவர் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். ஆசிய முதலீட்டாளர்களை அதிகளவில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதே முதல் கட்ட முயற்சியாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love