Home இலங்கை மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொட்டப்பட்ட மண்ணில் இருந்து எலும்புத்துண்டுகள் , பற்கள் மீட்பு :

மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொட்டப்பட்ட மண்ணில் இருந்து எலும்புத்துண்டுகள் , பற்கள் மீட்பு :

by admin

மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த மண்ணில் உள்ள எலும்புகள் நேற்று (27) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண் மன்னாரில் உள்ள பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் எமில் நகர் கிராமத்தைச் சேர்ந்த வீடு ஒன்றிற்கு விற்கப்பட்ட மண்ணில் சந்தேகிக்கப்படும் மனித எலும்புத் துண்டுகள் பல மீட்கப்பட்டுள்ளது.

-எமில் நகர் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குறித்த ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் ஒடு டிப்பர் மண்ணை பணம் கொடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த மண் வீட்டிற்கு வெளியில் கொட்டப்பட்ட நிலையில் மண்ணை அள்ளி வீட்டு வளவினுள் கொண்டியுள்ளார். -எனினும் மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் பல வர தொடங்கிய நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகம் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை(25) மாலை மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல்துறையினர் குறித்த வீட்டிற்கு உடன் காவல்துறை பாதுகாப்பை வழங்கிய நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்குச் சென்ற வவுனியா தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த எலும்புத்துண்டுகள் மனிதனுடையதா?அல்லது மிருகங்களினுடையதா? என்பது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

-இந்த நிலையில் குறித்த வீட்டிற்கு முன் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் உள்ள சந்தேகிக்கப்படும் மனித எலும்புத்துண்டுகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபனர் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் அகழ்வு செய்யப்பட்டது. -இதன் போது மேலும் மனிதனுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன

நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை 4 மணிமுதல் இரவு 7.30 மணிவரை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது. இதன் போது மனிதனுடைய எலும்புகள் என சந்தேகிக்கப்படும் பல எலும்புத்துண்டுகள் மற்றும் பற்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இரவு 7.45 மணியளவில் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று புதன் கிழமை(28) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் 2 அவது நாளாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More