Home இந்தியா உச்ச நீதிமன்றின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியது..

உச்ச நீதிமன்றின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியது..

by admin

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்த மத்திய அரசு இறுதிநேரத்தில் தீர்ப்பில் உள்ள திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More