Home இலங்கை யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன…

யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன…

by admin

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு சென்றிருந்த அமைச்சர், அங்கு பணி புரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அமைச்சரிடம் கருத்து தெரிவித்த பணியாளர்கள், “நாங்கள் அம்மாச்சி உணவகத்தில் இரசாயன மருந்துகள் கலக்கப்படாத மரக்கறிகளினால் சமைத்து வழங்கப்படும் உணவு பொருட்களை வைத்து,  பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க எமக்கு இடங்கள் போதாமையாகவுள்ளது” என கருத்து தெரிவித்தார்கள்.

அதிகமாக பெண் தலைமைத்துவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அம்மாச்சி  உணவகத்தினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும், அங்கு உள்ள சவால்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டார். அமைச்சருடன், அமைச்சின் செயலாளர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன. இதுதொடர்பாக இம்முறை வரவுசெலவு திட்டத்தில் கூடிய நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

   

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More