Home இலங்கை பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து சந்தேக நபர்களை அடயாளம் காட்டிய போதும் கைது செய்யவில்லை..

பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து சந்தேக நபர்களை அடயாளம் காட்டிய போதும் கைது செய்யவில்லை..

by admin

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்தில் வைத்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் சம்பவம் இடம்பெற்ற போதும் இன்று(01) வரை சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்படவில்லை. குறித்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெளிவாக அடையாளம் காட்டிய போதும் அவர்கள் கைது செய்யப்படாதது காவற்துறையினர்  மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கத்திக் குத்துக்கு இலக்கான மாணவனின் பெற்றோர்களான ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனா்

கத்திக் குத்துக்கு இலக்கான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட இழைகள் போடப்பட்டு சிகிசைபெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் கத்தி குத்தை மேற்கொண்ட சந்தேக நபர்களை மாணவன் அடையாளம் காட்டிய போதும் காவற்துறையினரால்  இதுவரை  கைது செய்யப்படவில்லை. என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காவற்துறையினர் மிகவும் அசமந்த போக்குடன் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும், காவற்துறையினரின் இச் செயற்பாடுகள் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினர்களை மேலும் ஊக்விப்பதாக அமைகிறது எனவும் மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் ஆலயத்தில் கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது எனத் தெரியவருகிறது.

3 Attachments

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More