Home இலங்கை நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுயாதீனமாக தீர்மானிக்கப்படும் – EPRLF

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுயாதீனமாக தீர்மானிக்கப்படும் – EPRLF

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகித்து பின் வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கோரிக்கைகளுக்கு கிடைக்கப்பெறும் பதில்களை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத்திட்டங்களை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள அவர், தொல்பொருள் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்கள் என்ற போர்வையில், வடக்கு கிழக்கில் தனியார் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இச்செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கைகளுக்கு பிரதமரிடமிருந்து கிடைக்கப்பெறும் பதில்களைப் பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிக்கப்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More