Home இலங்கை பணக்கையாடலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இ.போ.ச நடத்துனர்களை சேவையில் இணைக்க கட்டளை

பணக்கையாடலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இ.போ.ச நடத்துனர்களை சேவையில் இணைக்க கட்டளை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்களில் நடத்துனர்களாக கடமையாற்றிய போது பணக்கையாடலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட ஐவரை மீள சேவையில் இணைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்களில் நடத்துனர்களாக கடமையாற்றிய ஐவர் பயணிகளில் பற்றுசீட்டில் மோசடி செய்து பண கையாடலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டு சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அது தொடர்பில் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் தொழில் நியாய சபையில் முறையிட்டு இருந்தனர். அது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அவர்களை சேவையில் இணைத்து கொள்ளுமாறும், பணித்திருந்தமைக்கு எதிராக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதிபதி அவ்வாறு கட்டையிட்டார்.

நீதிபதி மேலும் தெரிவிக்கையில் ,

நடத்துனராக கடமையாற்றிய வேளையில் பயணபற்று சீட்டு பரிசோதகர்கள் பற்றுசீட்டுக்களை பரிசோதித்த போது , ஓரிருவரிடம் மேலதிக பணம் காணப்பட்டது. ஒருவரிடம் பணம் குறைவாக காணப்பட்டது. ஒருவர் யாழில்.இருந்து மன்னார் செல்லும் பயணிக்கு 6 ரூபாய் 50 சதம் வாங்கி பற்று சீட்டு கொடுத்துள்ளார்.

அரச பணத்தை கையாடல் செய்வது குற்றமாகும். அது பெருந்தொகையாக இருக்க வேண்டும் என இல்லை 30 சதமாக குற்றமே.

இந்த சம்பவத்தை பாரதூரமான துர்நடத்தையாக கருதாமல் ஒரு தவறாக இதனை கருதி பணக்கையாடலில் ஈடுபட்டவர்களை கடுமையாக எச்சரித்து மன்றானது அவர்கள் சேவையில் தொடர்ந்து நீடிக்க அனுமதி அளிக்கின்றது.

அவர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கால பகுதியையும் சேவை காலமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் , ஆனாலும் இடைநிறுத்தப்பட்ட கால பகுதிக்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட தேவையில்லை. அத்துடன் அவர்களுக்கு எந்த விதமான நஷ்டஈடும் கொடுக்க வேண்டியதில்லை என நீதிபதி கட்டளையிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More