Home இந்தியா பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்தப்படவில்லை :

பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்தப்படவில்லை :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது ஊக்க மருந்துகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என இந்திய குத்துச் சண்டை ஆண்கள் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்தியாகு நியேவா தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவுஸ்திரேலியாவில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து மருந்து ஊசிகள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் எந்தவொரு வீரரும் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை எனவும், விட்டமின் ஊசி ஒன்று வழங்கப்பட்டதாகவும் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இரண்டு நாட்களில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாக உள்ளது. தமது அணியின் எந்தவொரு வீரரும் ஊக்க மருந்து எதனiயும் பயன்படுத்தவில்லை என்பதனை அறுதியிட்டு கூற முடியும் என பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More