96
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஹங்கேரியில் விக்டர் ஒர்பான் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுகிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹங்கேரி வலதுசாரி கட்சியின் வேட்பாளர் விக்டர் வெற்றியீட்டியுள்ளார். 54 வயதான விக்டர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் பிரதமர் பதவியை வகிக்க உள்ளார்.
ஐரோப்பாவின் புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகளுக்கு எதிராகவே விக்டர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்ட கட்சிகளின் தலைவர்கள் தங்களது தலைமைப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love