Home இலங்கை புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் சர்வதேசத்தில் தடுமாறும் இலங்கை இராணுவம்….

புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் சர்வதேசத்தில் தடுமாறும் இலங்கை இராணுவம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


இலங்கை மற்றும் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி எதுவும் தெரியாத அமைப்புகள் மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் இராணுவம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை சரி செய்து கொள்ள சில காலம் எடுக்கும் எனவும் துரதிஷ்டவசமாக அன்று போல் இன்றும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையில், சிலர் இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நடவடிக்கை பணிப்பாளர் சபையின் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ தளபதி இதனை கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் கடமையாற்ற செல்லும் படையினருக்கு தேவையான கடமைகள் இந்த பணிப்பாளர் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலை வழங்கி, சரியான முறையில் இராணுவத்தினரை ஐ.நா அமைதிப்படை பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More