Home இலங்கை 2ஆம் இணைப்பு – யாழ்.வலி, வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு..

2ஆம் இணைப்பு – யாழ்.வலி, வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிப்பு..

by admin

யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.  மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.  கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது….

வலிகாமம் வடக்கில் இன்று 5 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதற்கான நிகழ்வு சற்று முன்னர் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

   

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More