Home உலகம் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேக நபரை கைது செய்த சீன அதிகாரிகள்

முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேக நபரை கைது செய்த சீன அதிகாரிகள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர் ஒருவரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுமார் அறுபதாயிரம் ரசிகர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த சந்தேக நபரை,  acial recognition   என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹொங்கொங்கின் பிரபல இசைக் கலைஞர் ஜக்கி சங் (  Jacky Cheung )இன் இசை நிகழ்வில் பங்கேற்றிருந்த போது, குறித்த நபரை சீன காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கண்காணிப்பு கமராக்களில் காட்சிகளின் ஊடாக முக அடையாளங்களை இனம் கண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அறுபதாயிரம் ரசிகர்கள் பங்கேற்றிருந்த நிகழ்வு ஒன்றில் சந்தேக நபரை காவல்துறையினர் இலகுவாக கைது செய்தமை, சந்தேக நபரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. பொருளாதார குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 31 வயதான  Mr Ao  என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More