Home இலங்கை பலமான தமிழ் கட்சி உருவாகக் கூடாது உருவாகினால் அது UNPக்கு சார்பாக இருக்க வேண்டும்…

பலமான தமிழ் கட்சி உருவாகக் கூடாது உருவாகினால் அது UNPக்கு சார்பாக இருக்க வேண்டும்…

by admin

பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை, அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும் என அக்கட்சி விரும்பும் என்ற உண்மையை கூறுவதற்கு தான் அச்சப்படவில்லை என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று (15.04.18) யாழ்.ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை தனது அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார். அதன்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது எனவும் கூறினார். பின்னர் தான் அமைச்சர் மங்களவுடன் பேசும்போது,  சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல. சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என தான் கூறியதாக மனோகணேசன் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More