Home உலகம் கரீபிய தலைவர்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரீசா மே மன்னிப்பு கேட்டார்…

கரீபிய தலைவர்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரீசா மே மன்னிப்பு கேட்டார்…

by admin

பொதுநலவாய நாடுகளின் குடிமக்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கரீபிய நாட்டு தலைவர்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மன்னிப்பு கேட்டுள்ளார்.

இவர்கள் பிரித்தானியாவில் பல தசாப்தங்களாக வாழ்ந்து, வேலை செய்த பின்னரும், அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லாத காரணத்தால், சட்டபூர்வமற்ற முறையில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

1948 முதல் 1971ம் ஆண்டு வரை கரீபிய நாடுகளில் இருந்து பிரித்தானியா சென்று இவ்வாறு குடியேறியவர்களை வின்ட்ரஷ் தலைமுறையினர் என முத்திரை குத்தப்பட்டள்ளது

போருக்கு பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாகுறை காரணமாக ஜமைக்கா, டிரினிடாட் , டோபாகோ மற்றும் ஏனைய தீவுகள் சிலவற்றில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு 1948ம் ஆண்டு வந்தடைந்த வின்ட்ரஷ் கப்பலின் பெயரால் இந்த தலைமுறையினர் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்த கப்பல் பல குழந்தைகள் உட்பட 492 பயணிகளை ஏற்றி வந்திருந்தது. பெற்றோரின் விசாவோடு வந்திருந்த குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஆவணங்கள் பெற விண்ணப்பிக்கவில்லை. இத்தகைய ஆயிரக்கணக்கானோர் பிரித்தானியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

1971ம் ஆண்டுக்கு முன்னர் வின்ட்ரஷ் கப்பலில் வந்தவர்கள் உள்பட பொதுநலவாய நாடுகளில் பிறந்த 5 லட்சம் பேர் பிரித்தானியாவில் தற்போது வாழ்வதாக ஒக்ஸ்ஃபேர்ட் பல்கலைக்கழகத்தின் குடிவரவு கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More