குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றமே பதிவாகியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலமாறு நீதி பொறிமுறை இலங்கையில் மிகுந்த மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் இன்னமும் சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment