Home இந்தியா இரு நாடுகளிடையே நல்லறவு- இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்!

இரு நாடுகளிடையே நல்லறவு- இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்!

by admin



இந்தியா  மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிற்கிடையே உள்ள கசப்புக்களை நீக்கும் வகையில் சீன ஜனாதிபதியுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் 27ஆம் திகதி சீனாவின் வுஹான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளுகின்றார்.

இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13ஆம் திகதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி ஷங்காய் நகரில் நடைபெறுகின்றது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்யியை இன்று சந்தித்த சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட இந்தியா – சீனா இடையிலான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுஷ்மாவுடன் செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட தலைவர்கள் மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர் வரும் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க வரும் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் க்சி ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More