குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானியாவிற்கான பயணத்தின முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு பயணம் செய்திருந்த ஜனாதிபதி பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் பிறந்த தின நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தியிருந்தார். இன்றுகாலை ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comment