Home உலகம் அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி

by admin
This photo provided by Metro Nashville Police Department shows Travis Reinking, who police are searching for in connection with a fatal shooting at a Waffle House restaurant in the Antioch neighborhood of Nashville early Sunday, April 22, 2018. (Metro Nashville Police Department via AP)


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டென்னீசீ மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிர்வாண நபர் ஒருவர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ள விடுதியொன்றுக்கள் புகுந்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இல்லியோன்ஸைச் சேர்ந்த 29 வயதான ட்ரவிஸ் ரெய்ன்கின்  (Travis Reinking) என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு, ட்ரவிஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More