Home இந்தியா மரண தண்டனைகளால் பாலியல்வன்முறைகள் குற்றங்கள் குறையுமா?

மரண தண்டனைகளால் பாலியல்வன்முறைகள் குற்றங்கள் குறையுமா?

by admin

மரண தண்டனைகளால் பாலியல்வன்முறைகள் குற்றங்கள் குறையும் என்பது தொடர்பாக விஞ்ஞானப்பூர்வமாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா? என மத்திய அரசிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பாலியல் குற்ற வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி டெல்லி உயர்நீதின்றில் தொடரப்பட்ட பழைய வழக்கு ஒன்றின் மீது விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் புதிய அவசர சட்டம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பினர்.

பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும், 18 வயதுக்கு உட்பட்ட குற்றவாளிகள் இதில் ஈடுபடுவதை தடுக்க அவர்களுக்கு கல்வி கற்பிப்பது பற்றியும் மத்திய அரசு சிந்திக்கவில்லை.

சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றத்தை பொறுத்தவரை பெரும்பாலான வழக்குகளில் அந்த சிறுமியின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களில் யாரோ ஒருவர்தான் குற்றவாளியாக இருக்கிறார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதை பொறுத்தவரை மத்திய அரசு விஞ்ஞான ரீதியாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா?… இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளை சிந்தித்து பார்த்தீர்களா?…

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்முறைக்குட்படுத்தி கொலை செய்வதற்கும், வன்முறைக்குட்படுத்துவதற்கும் ; ஒரே தண்டனை என்றால் அந்த சிறுமியை குற்றவாளிகள் உயிருடன் விட நினைப்பார்களா? என்பது பற்றி நீங்கள் யோசித்தீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More