Home இலங்கை நானாட்டான் பிரதேச சபை புதிய உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில் ஐ.தே.க, – த.வி.கூட்டணி உறுப்பினர்கள் வெளி நடப்பு ( வீடியோ இணைப்பு

நானாட்டான் பிரதேச சபை புதிய உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில் ஐ.தே.க, – த.வி.கூட்டணி உறுப்பினர்கள் வெளி நடப்பு ( வீடியோ இணைப்பு

by admin

நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது திருவுலச்சீட்டின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியமையானது’இறைவன் கொடுத்த வரம்’ என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை(25) காலை நானாட்டான் பிரதேச சபையில் இடம் பெற்றது.

நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ச.லோகேஸ்வரம்; தலைமையில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவர் உப தலைவர் உறுப்பினர்கள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் நானாட்டான் ம.வி பாடசாலைக்கு முன்பாக ஊர்வலமாக நானாட்டான் கலாச்சர மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.

-பின் கலாச்சார மண்டபத்;தில் நிகழ்வுகள் இடம் பெற்றது.இதன் போது விருந்தினர் உரையின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரை நிகழ்த்தினர். குறித்த உரையில் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் உப தலைவர் தெரிவுகள் இடம் பெற்ற போது குறித்த தெரிவின் வாக்களிப்புக்கள் சம நிலையை அடைந்தது.

எனினும் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் திருவுலச்சீட்டின் மூலம் இடம் பெற்ற போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் திருவுலச்சீட்டின் மூலம் தலைவர் மற்றும் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ‘இறைவன் கொடுத்த வரம்’ என தெரிவித்தார்.

-இதன் போது குறித்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்தில் இருந்து ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்கள் 8 பேர் வெளி நடப்பு செய்தனர்.

-எனினும் குறித்த நிகழ்வுகள் எவ்வித தடங்களும் இன்றி நிறைவடைந்து.குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை எனவும்,பழையதை மறப்போம்,மறப்போம் என கூறிக்கொண்டு பழைய விடயங்களை ஞாபகப்படுத்துகின்றமை தமக்கு வேதனையை ஏற்படுத்துவதாகவும்,அதனை கண்டித்தே தாம் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்ததாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More