Home இந்தியா திண்டிவனம் பகுதியில் பதற்றம் – அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் :

திண்டிவனம் பகுதியில் பதற்றம் – அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் :

by admin


திண்டிவனம் நகரில் 7 அரச பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 300 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டிவனம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையினை நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் அவமரியாதை செய்தமையினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வீதி மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் சிலை மீது தாக்குதல் நடத்திய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என வழங்கிய உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை 7 அரசுப் பேருந்துகளை மோட்டார்கைச்சளில் வந்த சிலர் கல்வீசி தாக்கியதில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. இதனால் திண்டிவனம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 300 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More