Home இந்தியா உத்தர பிரதேசத்தில் பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதி விபத்து 13 மாணவர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதி விபத்து 13 மாணவர்கள் உயிரிழப்பு

by admin

உத்தர பிரதேசத்தில் ஆளில்லா புகையிரத கடவையை கடக்க முயன்ற பாடசாலை வாகனம் மீது புகையிரதம் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் மோதியதில் பாடசாலை வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டதாகவும் இந்த விபத்தில் பாடசாலை வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் காயமடைந்தவர்களை மீட்;டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More